சனி, 14 பிப்ரவரி, 2015

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தனியார்)1996 ஆம் ஆண்டில் மாங்குளத்திற்கு   அண்மையிலுள்ள ஒலுமடு என்ற அழகிய கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இடப்பெயர்ந்த மக்கள் தமது மருத்துவ தேவைகளை பெறக்கூடியவாறு வன்னியின் மையத்தில் மருத்துவமனை அமைந்தது சாலப்பொருந்திற்று. இறுதிவரை சில மக்கள் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையை ஒலுமடு மருத்துவமனையென்றும் அழைத்தனர்.இந்த (ஒலுமடு)மருத்துவமனையின் மக்கள் நம்பிக்கையிற்கு அதன் பொறுப்பு மருத்துவராயிருந்த Dr தர்மேந்திராவும் ,எமது மூத்த மருத்துவர்
Dr கெங்காதரனும் வழிகோலினர் என்றால் அது மிகையல்ல. ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஜெயசுக்குறு நடவடிக்கையால் இம்மருத்துவமனை இரண்டாகி புதுகுடியிருப்பிற்கும் , மல்லாவியிற்கும்  இடம்பெயர்ந்தது , பின் மல்லாவிக்கிளை கிளிநொச்சியிற்கு  10/02/2001 அன்று புதுப்பொலிவோடு இடம்மாறிற்று.2008 இன் பிற்பகுதியில்  கிளிநொச்சி மருத்துவமனை மீண்டும்

இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கிற்று. யுத்தத்தில்   மருத்துவமனையும் காணாமல் போயிற்று.நினைவுகள்தான் எஞ்சியிருக்கிறது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share