வியாழன், 19 பிப்ரவரி, 2015

மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்

ஒரு மாதம் கழிந்துவிட்டது
காணாமல் போனவர்
இருக்கிறாரா ? இல்லையா?
சிறு செய்திகூட இல்லை  
என்ன இணக்கம் வேண்டிக்கிடக்கிறது
விதவையா? சுமங்கலியா ?
இரண்டும் கெட்டவாழ்வு
அப்பா வர பொங்குவோம்
நல்ல உணவை உண்ணும் போதும்
பிள்ளைக்கு / கணவனுக்கு ?
இரவும் பகலும் துயரில் கரையும்
விடையில்லா அந்தரித்த வாழ்வு

அண்டங்காக்காவுக்கு
மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்
பிணங்களைப்போல   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share