ஞாயிறு, 11 அக்டோபர், 2015

டாக்டர் கெங்காதரன் ஞாபகார்த்த மருத்துவமனை உருவாக்கவேண்டும்

1984 ஆம் ஆண்டு நானும் அருணனும் யாழில் கஷ்டப்பட்ட சில இடங்களில் இலவச கல்வி நிலையங்களை உருவாக்கினோம்.நாங்களே கொட்டில்கள் போட்டு,நிலம் மெழுகி, இருப்புகள் செய்து அவற்றை உருவாக்கினோம். அவற்றை தொடர்ந்து எம்மால் நடாத்தமுடியவில்லை.
1999 இல் கிளிநொச்சியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையூடாக பதினைந்து வயதிற்குள் பாடசாலை விலத்திய மாணவர்களை அவர்களுக்கு தேவையான பாடசாலைப்பொருட்களை வாங்கிக்கொடுத்து பாடசாலைகளுடன்   நேரடி தொடர்புகொண்டு மீள இணைத்தோம். பின் அந்த மாணவர்களை local NGO க்களுடன் தொடர்புபடுத்திவிட்டோம்.  
1999 ஆம் ஆண்டே சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்குரிய தொண்டர்களுக்கு OXFAM நிறுவனத்தின் நிதியுதவியுடன் பத்தாம் வகுப்பு கற்கையை மீளவழங்கி பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற உதவினோம். இதில் பலர் அடுத்தவருடமே குடும்ப மருத்துவமாது கற்கைக்கு உள்வாங்கப்பட்டார்கள்.
2007,2008 இல் வீட்டிற்கு ஒருவர் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது எமது தலைமையுடன் நேரடியாய் தொடர்புகொண்டு உயர்தரத்தில் கெட்டிக்கார  விஞ்ஞான   மாணவர்களை ஒன்றாக்கி கற்பித்தோம். முக்கால்வாசி மாணவர்கள் பல்கலைக்கு தெரிவானார்கள்.
திலீபன் மருத்துவமனைகளுக்கு குறுகியகாலம் பொறுப்பாய் இருந்தபோது
மருத்துவமனைகளுடன் இலவச கல்வி நிலையத்தை உருவாக்க எண்ணியிருந்தேன். அதற்கு  அவகாசம் போதவில்லை.


டாக்டர் கெங்காதரன் ஞாபகார்த்த மருத்துவமனை உருவாக்கவேண்டும் என மனம் விரும்புகிறது. கடவுள் விரும்புகிறாரோ தெரியவில்லை.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share