புதன், 8 ஜூன், 2016

எறும்புகள் சுமந்தன மலையை

எனக்குள்ளே இரகசியங்கள்
இரையாகிப்போகட்டும்
என்னோடு வாழ்ந்து பிரிந்த
விடுதலைக்கதிர்களின் நினைவில்
எஞ்சிய காலம் கொதித்து முடியட்டும்
வழியற்ற பொழுதுகளில் உண்ட
பழுதாகிய உணவின் சுவைகூட
சொர்க்கத்தில் எனக்கில்லையே
மரத்த வாழ்வில்
குளிர்மை வாழ்விற்கு
ஒன்றாய் வாழ்ந்த தோழர் இல்லையே
மக்கள் தன் மானிட நேயம் உறைந்ததால்
எறும்புகள் சுமந்தன மலையை
சில இறந்தது போக - மிகுதி
திசைக்கொன்றாய் அழுந்துகின்றன பாரீர்
  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share