புதன், 27 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் -6

  2009 இல் போர் முடிந்ததும் இலங்கை அரசு வன்னியில் திட்டமிட்டு செய்த படுகொலைகளை மறைக்கமுற்பட்டது. போர் தீவிரமான போது சர்வதேச அமைப்புகளை அப்பிரதேசத்தில் இருந்து முழுமையாக அகற்றியிருந்தது. போர்க்காலத்தில் உள்ளிருந்து சொல்லப்பட்ட தகவல்களையும் புலிகளின் நெருக்குதலால் சொல்கிறார்கள் என கதைவிட்டிருந்தது. போரில் மக்களுக்கு Zero  Casualty  என முழுப்பொய்யை சொன்னது. போரின்பின்பும் சர்வதேசத்தில் இருந்து மக்களை குறிப்பிட்டகாலம் பிரித்துவைத்து பொய்யை உலகிற்கு உண்மையாக்க முயன்றது. இழப்பின் சூடு ஆறமுதல் உலகிற்கு உண்மையை சொல்லும் நேரடி சாட்சிகளில் ஒருவனாய் இருந்தது மனதிற்கு ஆறுதல் தருகிறது.  உலகம் எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் இலங்கை இனப்படுகொலை செய்தது என்பது செய்தியாயிற்று.  2009 ,2010 ஆண்டுக்காலங்கள் எனக்கு அதிக மனப்பாதிப்பு காலமாய் இருந்தது.         



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share