ஞாயிறு, 31 டிசம்பர், 2017
திரும்பிப்பார்க்கிறேன் 7
2006 ,2007 ,2008 ஆண்டுக்காலப்பகுதியில் வன்னிக்குள் சுமார் பத்தாயிரம் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் நெறிப்படுத்தலில் குறிப்பாக கஷ்டப்பிரதேசங்களில் இவ் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்புப் பொறுப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் இந்நடவடிக்கையிற்கு பாரிய பங்காற்றியிருந்தார். தமிழீழ சுகாதாரசேவைகள் , திலீபன் மருத்துவசேவையினர் இவ்வகுப்புக்களை நடாத்தி முடித்து தமிழீழ சுகாதாரசேவைகளின் முதலுதவி சான்றிதழ்களையும் வழங்கியிருந்தனர். பல முதலுதவியாளர்களை போர்ச்சூழலில் இழந்துவிட்டோம். நிச்சயமாக போர்மருத்துவத்தில் இவர்களது பங்கும் இலைமறைகாயாய் இருந்திருக்கும். நான் வீட்டுக்கு ஒரு முதலுதவியாளரை உருவாக்க நினைத்திருந்தேன் (சுமார் எண்பதாயிரம்). அதற்கு சூழல் இடம்தரவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக