ஞாயிறு, 25 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -27


 ஜூலியட் மைக் என்ற சங்கேத மொழியில் அழைக்கப்படும் ஜெயம் , தனது தாயகத்தை எந்தளவு நேசித்தார் என்பதை அவருக்கு நெருக்கமாய் இருந்து அறிந்தவன் நான். எண்பதுகளின் நடுப்பகுதியில் முதல் தடவையாய் அவரை சந்தித்தேன். அப்போது கையில் காயத்துடன் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக சென்றார். 93  இல் நடந்த விசேட பயிற்சி முகாமிற்கு பொறுப்பாய் இருந்தார். அப்போதே என் நெருங்கிய நண்பரானார். பின் காட்டு கொமோண்டோஸிற்கு பொறுப்பாக இருந்தார். ராஜு அண்ணை முழு கொமோண்டோஸிற்கும் பொறுப்பாக இருந்தார்.   இயக்கத்திற்குள் ஏற்பட்ட அசாதாரண குழப்பத்தோடு ஜெயமும் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு 96 இல் விடுவிக்கப்பட்டார். அடுத்த நாளே என்னை சந்திக்க முத்தையன்கட்டில் இயங்கிய மருத்துவமனைக்கு வந்தார்.  சுமார் மூன்று மணிநேரம் கண்ணீரோடு கதைத்தது என் நெஞ்சில் இன்றும் படர்ந்து இருக்கிறது.  வீரனே! உன் தாய்த்தேசத்தின் பாசம் ஊற்று அடங்காதது. மீள ஒரு பிறப்பிருந்தால் சந்திப்போம் நண்பா.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share