மீண்டும் ஒரு இழப்பு , மனது பிசைந்து வலித்து ஓலமிடுகிறது . உதயகீதன், ஒரு முன்னாள் மருத்துவப்போராளி, எங்களால் உருவாக்கப்பட்டவன், கடினகாலங்களில் தோளோடு தோளாய் நின்று சிலுவை சுமந்தவன். கலிகாலத்தில் வழமைபோல் செய்யாத குற்றத்திற்காக அல்லது செய்த புண்ணியத்திற்காய் சகாக்களோடு சிறையிருந்தவன். எமது மக்களின் மீள்குடியேற்றத்தின் முதன்மை பணியான மிதிவெடி அகற்றலில் கள மருத்துவ உதவியாளனாக தொழில் புரிந்தவன். எப்போதும் மக்களுக்காய் வாழ்ந்தவனை, மருத்துவ மனத்தினனை , நோயில் இழந்ததுயர் நெஞ்சை இடிக்கிறது. போய்வா உதயகீதா, அங்கும் உன் உயிர்ச்சகோதரர்கள் இருக்கிறார்கள். மீண்டும் சந்திப்போம்.
ஞாயிறு, 12 மே, 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக