சனி, 1 அக்டோபர், 2022

கரிகாலர்கள் உதிப்பதில்லை, மரணிப்பதுமில்லை.

 நீ பிறந்தநாளே சிறுவர்தினம் ஆயிற்றா?

சிறுவனாகவே 

வரலாறு முழுக்க வாழப்போகிறாய் !

தொப்  தொப்பென ஓடிவருகிறாய் 

படரும் செந்தளித்த முகப்புன்னகை 

துளைத்து துளைத்து கேள்விகள் 

துருதுருவென அசையும் விழிகள்

 

கள்ளம் கபடம் அறியா  

ஒளிவுமறைவற்ற இதயம்  

துளையிடப்பட்டதா!

வழிந்த குருதியில் உன் செய்தி 

தாய்(மண்)மடியோடு கலந்துவிட்டதா!  


நாலாபுறமும் 

பறவைகள் பேசிக்கொள்கின்றன 

"கரிகாலர்கள் உதிப்பதில்லை,

மரணிப்பதுமில்லை,

மண்ணினுள் வாழ்வார்கள்" 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share