புதன், 31 மே, 2023

நாடற்றவனின் அனுபவங்கள்

புரியாத மொழிப்பாடல்களையும் 

கேட்கிறது மனம் 

இசையோ குரலோ 

மனதோடு கோர்வையாகிவிடுகிறது 

சில புரிந்த  மொழிப்பாடல்கள்கூட 

மனதை ஏனோ ஆற்றுப்படுத்துவதில்லை 

தாய்நிலமிழந்து அந்தரத்தில் கழிகிறது  நொடி 


கண்கள் தெரியாதவனை 

 தினம் தினம் 

 விதவித உடையுடுத்தி 

 கைபிடித்து கூட்டிப்போகிறாய் 

 வந்த பாதைகூட தெரியவில்லை 

 வந்துவிட்டேன் அம்மா 

எனக்குள் நான் அடங்கிப்போகிறேன்


மலையுச்சிக்கும் வந்து போகிறது நிலவு  

காலமீட்டலை சுட்டிப்போயிற்று இரவு    

நெஞ்சோடு முட்டிப்போகிறது அழுகை

விடிகாலையில் புதிய பயணம் 

நாடற்றவனின் சுவடுகளை விட்டுப்போகிறேன்



 


 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share