நான் ஒரு விவசாய பின்னணியில் வளர்ந்தவன். நான் சரியென்று நினைப்பதை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பேன். தனிப்பட்ட யார் மீதும் இன்றல்ல என்றும் காழ்ப்புணர்ச்சி என்னிடம் இல்லை . என்னை பெரியளவில் பிரச்சாரப்படுத்திக்கொள்பவன் அல்ல. நானும் எனக்கான பணியுமாகவே ஓடிக்கொண்டிப்பேன். என்னை நோக்கி நேரிடையாகவும் மறைமுகமாகவும் கல்லெறிந்து கொண்டேயிருப்பார்கள், அது எனக்கு பொருட்டல்ல. என் கண் முன்னால் கண்ட தியாகங்களை அல்லது அர்ப்பணிப்புக்களை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எப்போதும் விலைபோகாமல் வாழ முயற்சிப்பவன். வாழ்க்கை என்பது ஒரு ஓடும் வாய்க்கால்தான், விரும்பியோ விரும்பாமலோ நகர்ந்தே செல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக