புதன், 21 ஜூன், 2023

சோகம் கரைக்க கடற்கரையிற்கு வந்தேன்

சோகம் கரைக்க கடற்கரையிற்கு வந்தேன் 

கடல் அலைகளாகி எனைத்தேடிவந்து 

சுகம் விசாரித்தபடி இருந்தது 

மீன்கள் விதவிதமாய் நடனமாடி 

என்நிலைமாற்ற முயன்றன 

நீலவானம் கடலில் இறங்கி   

வருவதுபோலிருந்தது  

பாய்மரங்கள் அசைந்தன 

படகுகள் பாடிப்போயின 

கொக்குகள் என்னைப்பார்க்கவேயில்லை 

குடிசைகளின் ஆரவாரங்களில் 

மணலினுள் புதையாதபடி நகர்கிறேன் 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share