சோகம் கரைக்க கடற்கரையிற்கு வந்தேன்
கடல் அலைகளாகி எனைத்தேடிவந்து
சுகம் விசாரித்தபடி இருந்தது
மீன்கள் விதவிதமாய் நடனமாடி
என்நிலைமாற்ற முயன்றன
நீலவானம் கடலில் இறங்கி
வருவதுபோலிருந்தது
பாய்மரங்கள் அசைந்தன
படகுகள் பாடிப்போயின
கொக்குகள் என்னைப்பார்க்கவேயில்லை
குடிசைகளின் ஆரவாரங்களில்
மணலினுள் புதையாதபடி நகர்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக