எனக்கு எப்போதும் தேவைப்படுகிறது
சுதந்திரம்
அதற்காக
நான் கொடுத்த விலைகள் அதிகம்
எதுவும்
சுதந்திரத்திற்கு ஈடில்லை
அதிக மகிழ்வு போல
அதிக கவலையும் என்னைப்பாதிக்கிறது
எவ்வளவுதான் சுதந்திரத்தை விரும்பினாலும்
எனக்குள் ஒரு எல்லை இருக்கிறது
அதை கடந்து போகமுடியாது
அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக