இரவு படுக்க நேரமாகிவிட்டது
எல்லோரும் சாப்பிட்டபின்
பிள்ளைகளுக்கு பல் தீட்டி,படுக்க வைத்து
பாத்திரங்கள் கழுவி
தோய்த்த உடுப்புகள் மடித்து
அடுத்தநாள் வேலைகளை நினைத்தபடி
படுக்கைக்கு போக பதினொரு மணி
காலை ஐந்து மணிக்கு எழுந்து
ஓய்வெடுக்காமல்
ஒவ்வொரு வேலையாய் முடித்து
சதா செல்லம்கொஞ்சம்
சின்னமகளை நேசரியில் விட்டு விட்டு
காலையுணவை உண்டபின்
செய்ய வேண்டிய வேலைகளை
மனதில் பட்டியலிட்டுவர
டிப்பரில் யமன் அசுரவேகத்தில் வந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக