வியாழன், 27 ஜூன், 2013

விசாரணைக்குழு

நடேசன் அண்ணை  போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும்  பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.
நாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.  
அவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.
அவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்
இப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. 

  • ஓவியன் -   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share