சனி, 3 ஆகஸ்ட், 2013

யாரும் குறிப்பெடுக்கா சோகம்

  


நேற்றுவரை
ஒன்றாய் வாழ்ந்தவரை,
வீரச்சாவு என கேட்கும் கணங்கள்
மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள்
அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள்
உலகில் யாருக்குமே வரக்கூடாது
எங்கள் பணிகளுக்குள்
உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி
இறுதி நிகழ்வை நடாத்தி
எல்லோரும் போன பின்
துயிலும் இல்லத்தில் இருந்து
நாங்கள் அழுவோம்
சிலர் ஊமையாய் அழுவர்
சிலர் ஒப்பாரி வைப்பர்
சிலர் சாமம் தாண்டியும்
மண்ணில் வீழ்ந்துகிடப்பர் 

யாரும் குறிப்பெடுக்கா சோகம்  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share