புதன், 12 பிப்ரவரி, 2014

அம்மா

அம்மா
இருந்த உணவை பகிர்ந்து
எம் வயிறு நிரப்பி
நீரை மட்டும் நீ குடித்து
சிரித்தபடி எமை வளர்த்தாய்
வளர்ந்தால்
உன்னை பார்ப்பார் என்றோ
படித்து பெரியவர் ஆவார் என்றோ
நீ கனவு கண்டிருப்பாய்
எதுவும் நடக்கவில்லை
யாருக்கும் உதவும் உன்மனம்
பிள்ளைகளோடு பிறந்ததால்
பிள்ளைகள் உன்னோடு இல்லை
ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் இறுதிசடங்கில் கூட
உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று 
அம்மா நீ விரும்புவாயோ
இல்லையோ
அடுத்த பிறப்பிலும்

நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்


Share/Save/Bookmark

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அம்மாவைப்பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது

அடுத்த பிறப்பிலும்
நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்... எல்லோரும் வேண்டி நிப்பது...இதைத்தான்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக

Bookmark and Share