திங்கள், 15 செப்டம்பர், 2014

மருத்துவ பெருந்தகை

மருத்துவ சேவை எப்போதும் இரு பிரிவுகளுக்கூடாக வழங்கப்படும்.1, Curative sector     2,   Preventive sector.  

வன்னியின் போர்ச்சூழலில் Curative sector இல் தனியார் மருத்துவமனையாக இருந்தபோதும் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது. பொன்னம்பலம் மருத்துமனை ஒலுமடுவில் ஆரம்பித்து பின் புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியில் இயங்கிற்று. இந்த பொன்னம்பலம் மருத்துமனையின் சேவையின் முக்கிய கர்த்தாவாக என்றும் அன்புக்குரிய மருத்துவ பெருந்தகை வைத்தியகலாநிதி கெங்காதரன் ஐயா அவர்கள் இருந்தார்கள்.ஊதியம் பெறாமல் உழைத்தார்கள்.சில ஆயிரத்திற்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை அவர் இந்த மருத்துவமனைகளில் செய்திருக்கிறார்.   எளிமையும் வேகமும் எப்போதும் அவரிடம் குடியிருக்கும்.புல்லாங்குழல் வாசிப்பதிலும் சளைத்தவர் அல்ல.சில பொது நிகழ்ச்சிகளையும் அக்காலத்தில் நடாத்தி இருந்தார்.    ஒரு குடும்பத்தின் மூன்று  பரம்பரைக்கு பிரசவ மருத்துவராய் இருந்திருக்கிறார்.போர்ச்சூழலில் இவரது மக்களுக்கான மருத்துவப்பணி மிகவும் பெறுமதியானது .எங்கிருந்தாலும் வாழ்க.




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share