வெள்ளி, 24 அக்டோபர், 2014

எங்கே அந்த "பாதங்கள்"?

மயிரிழையில்
உயிர்தப்பிய கணங்களால்
நீளமானது என்வாழ்வு

கடும்பயிற்சியோடும்
பொறுப்பை சுமந்து
ஓய்வுமறந்த உடல்
நோயைச்சுமக்கிறது

பறவைகளோடு
பறந்து திரிந்த மனம்
பாலைவனத்தில்
குந்தியிருக்கிறது
பாறாங்கல்லாய்

நெடுந்தீவிலிருந்து
அம்பாறைவரை
மன்னார் தொடங்கி
சம்பூர்வரை
சுவடுகள் இருக்க
எங்கே அந்த "பாதங்கள்"?    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share