திங்கள், 16 மே, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை என்ன பயம் உனக்கு?

கற்பனைக்கு எட்டா மாளிகை
இனி கட்டமுடியா மாளிகை
கல்லாயிற்று நேசித்தமண்ணோடு
17/05/2009

சதா
விடுதலைக்காய்
துடித்த இதயங்களை
இழந்த கொடுமையை

ஓருயிர் காக்கவே
எம் உயிர் வைப்பவர் நாம்
இத்தனை உயிர்களுக்கு பின்பும்

கொழுந்து விட்டு எரிகின்றன
அந்த குளிர்மையான நினைவுகள் - இன்று
மிருக பற்களுக்கு நடுவில்
வாழ்வதற்காய் துடிக்கும் இதயம்  

கண்கள் திறந்தபடி இரு(ற) ந்தவன் 
பார்த்துக்கொண்டே இருப்பான்
உடல்களை எரித்தாலும் ஆன்மா சாகாது
இலட்சியத்திற்குள் வாழும்  

 இருள் கூடக்கூட
பொட்டு வெளிச்சமும்
பிரகாசமாகும்
இழப்பதற்கு எதுவுமில்லை
என்ன பயம் உனக்கு?
  




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share