ஞாயிறு, 29 மே, 2016

என் இனம் அழிக்கப்படும் கொடூரம்


உலகக்கண் முன்  
என் இனம் அழிக்கப்படும் கொடூரம்
இனி எந்த இனத்திற்கும்  நேர்ந்துவிடக்கூடாது

உலகமே!
நீயும்
ஏன் என் இனத்தை அழிக்கிறாய்?
உன் பிரதிநிதி யேசுவா? புருட்டசா?
நம்பியவரை நட்டாற்றில் விடுகிறாய்
வஞ்சகமாய் நஞ்சாய் கலக்கிறாய்
வாய்விட்டு அழுவதை வேடிக்கை பார்க்கிறாய்
வேஷங்களுடன் அத்தர் அடித்து வருவாய்
எங்களுக்கு
"உலகம் "நம்பிக்கையின் அச்சில் சுற்றவில்லை
கயிறாய் கழுத்தை சுற்றியிருக்கிறது
தேவையானபோது இறுகுகிறது

இனத்தின் கோடரிக்காம்புகள்
உணர்வதில்லை
தமக்கும் சேர்த்துத்தான் குழி தோண்டப்படுவதை

இன விசுவாசிகள்
தங்களுக்குள் அடிபட்டு
மாரித்தவக்கைகளாய் கிடக்கிறார்கள்

அப்பாவி மக்கள்
புலனாய்வு வலைக்குள் மீன்குஞ்சுகளாய்
அங்கும் இங்கும் ஓடிவிளையாடுகிறார்கள்    

தற்கால கவலையெல்லாம்
இன்னும் எத்தனைகாலம்
என் இனம் தாக்குப்பிடிக்கும்?
ஈழத்தில் மட்டுமல்ல புலத்திலும்தான்  
        


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share