திங்கள், 25 ஜூலை, 2016

என்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்?

"வாழ்க்கை "
வெறும் சக்கரம்தான்
பூமி அல்ல 


ஒவ்வொரு மனிதனும்
வெறும் தேர்வுதான்
அவன் அறியாமலே 


யாரிடமும் சொல்லாமல் வந்தேன்
சொல்வதற்கு யாருமில்லை
சொல்லவும் எதுவுமில்லை    

 
வீழ்ந்தவருக்கு
இயன்றவரை கைகொடுத்தேன்
நீ வீழும்போது நான் அருகிலில்லை
என்னை இயன்றவரை சபிக்கிறேன்
மனித நேசிப்பில் எப்போதும் உயர்ந்தவன் நீ
அர்ப்பணிப்பில் ஒரு பல்கலைக்கழகம் நீ
என்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்?     

  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share