சனி, 9 ஜூலை, 2016

என்னை நான் புரிகிறேன்

எனக்கு
நானே ஒரு புதிர்
தூண்டிலில் மீன் துடிப்பதை
நான் பார்க்க விரும்புவதில்லை
மீன் உணவு எனக்கு பிரியமானது

மனித உயிர்களை மதிப்பவன்
கொலைகளை வெறுப்பவன்
மனித விடுதலையே என் இலக்கு
எனக்குள் நானே ஒரு முரண்

மனித வேற்றுமைகள் என்னிடமில்லை
என் மக்களுக்காய் சாகத்துணிந்தேன்
சயனைட் குப்பிகளுடன் பலவருடம் வாழ்ந்தேன்
நீலமெனில் கடலும் வானமும் ஒன்றா?
என்னை நான் புரிகிறேன்
உலகம் எப்போது?



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share