வியாழன், 12 ஜனவரி, 2017

வேண்டாதவை வருகின்றன போதைப்பொருள்களாய்

காணாமல்போனவர் தான்
வரவில்லை
அவர்பற்றிய செய்தியும் வரவில்லையே
வருவார் என்றால் எப்போது?
இல்லை என்றால் என்ன நடந்தது?
தாய் காத்திருந்தே இறந்துபோனாள்
மனைவி உருக்குலைந்துபோனாள்
பிள்ளைகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
புதுக்குடி சிங்களவருக்கு
நாவற்குழியில் வீடுகள் வருகின்றன
யாரும் அழைக்காமலே
புத்தர் சிலைகள் முளைக்கின்றன
தமிழரை இலங்கையில் கரைக்கும்
அமிலம் வெல்லமென ஊற்றப்படுகிறது
தேவையானவை வரவில்லை
அரசியல் தீர்வு ,சிறைக்கைதிகள்
காணாமல் போனவர்
தேவையானவை வரவில்லை
வேண்டாதவை வருகின்றன  
போதைப்பொருள்களாய்      



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share