வெள்ளி, 26 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-11


சமாதானகாலத்தில் (2003 ) நெடுந்தீவிலும் அனலைதீவிலும் அந்த மக்களுக்காய் மருத்துவமுகாம் நடாத்த சென்ற குழுவில் நானும் இருந்தேன். இராணுவத்தின் நகர்வின்போது வேலணை பகுதியில் இருதடவைகள் களமருத்துவராய் நின்றிருக்கிறேன். காரைநகர், மாதகல், அராலிக்கரை , மாவிட்டபுரம், வளலாய், அச்சுவேலி, பளை, யக்கச்சி, மருதங்கேணி, ஆழியவளை, கிளாலி, மணியம்தோட்டம்  என குடாநாட்டில் பலபகுதிகளில் களமருத்துவராய்  நின்றிருக்கிறேன். யாழ்குடாவிற்குள் பல மருத்துவவீடுகளையும் நடாத்தியிருக்கிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார், வவுனியா வடக்கு , மணலாறு, சம்பூர் பிரதேங்களில் களமருத்துவராய் நின்றிருக்கிறேன் , பல சத்திரசிகிச்சை கூடங்களையும் நடாத்தியிருக்கிறேன். சுனாமிக்கு பின்னான மருத்துவ திட்டமிடல் , அறிக்கையிற்காக வடமராட்சி,கிளி,முல்லை,திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையென சென்றுவந்திருக்கிறேன். ஆனால் எனது சொந்த ஊரான நயினாதீவிற்கு எனது மருத்துவ பங்களிப்பை நான் நேரிடையாய் செய்ததில்லை.    




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share