புதன், 31 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 15



  1977    இல் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழக்கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது நாம் சிறுவர். எமது தொகுதியில் தேர்தலுக்கு நின்ற தர்மலிங்கம் ஐயாவின் ஆதரவாளர். நடைபவணிகளில் , தேர்தல் மேடைகளில் முன்வரிசைகளில் ஒலிக்கும் " லிங்கம்   லிங்கம்  தர்மலிங்கம் " என்று ஒலித்த குரல்களில் என்குரலும் ஒன்று. அந்தக்காலத்திலேயே " வேதனை, சோதனை, சாதனை" என்ற நீண்ட கட்டுரையை எழுதினேன். பாடசாலையில் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க வகுப்பறை முன் வாசித்துக்காட்டினேன். இதுதான் நான் அறிந்தவரையில் என் முதலாவது ஆக்கம். எமது தமிழ் ஆசிரியர் வேறு உயர்வகுப்பு ஒன்றிலும் இக்கட்டுரையை வாசித்துக்காட்டியிருந்தார். இக்கட்டுரையின் மூலப்பிரதியும்  1987  இல் இந்திய இராணுவத்தால் எரிக்கப்பட்ட எங்கள் வீட்டுடன் சேர்ந்து எரிந்த
என் ஆவணங்களுடன் ஒன்றாகிப்போயிற்று.         



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share