செவ்வாய், 30 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 14

 

ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய  காலம் போராளியாய் வாழ்ந்தேன். எனக்கு தரப்பட்ட எல்லாக் கடமைகளையும் சிறப்பாக முடித்ததாய் உள்மனம் சொல்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் என் உயிரை காக்க ஒரு போதும் சிந்தித்தவனல்ல. பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். இன்று ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு திரும்பினாலும் இழந்துபோன என் சகோதர நண்பர்களின் நினைவுகள் என்னை, என் சமநிலையை அலைக்கழிக்கின்றன . எந்த சந்தர்ப்பத்திலும் இனத்தின் விடுதலைக்கு அல்லது விடுதலைப்பாதைக்கு சிறுதுளியும் தீங்கிழைத்தவன் அல்ல. என் போராட்டகாலம் முழுக்க ஓய்வில்லாமல் இயங்கியிருக்கிறேன். நோயோடும் பணியாற்றியிருக்கிறேன்.தலைவனின் நம்பிக்கையை இறுதிவரை பெற்றிருந்தேன். எமது விடுதலை அமைப்பின் வளர்ச்சியிலும் அதே காலத்தில் போருக்குள் வாழ்ந்த மக்களின் மருத்துவ சேவையிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பங்களிப்பை செய்திருக்கிறேன்.  என்னோடு சுமை தூக்கிய என் சகோதர நண்பர்களின் தியாகங்களை எழுத்திலாவது வடிப்பேன்-  இது உறுதி.        



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share