15 /05 /2009 அதிகாலை துப்பாக்கி ரவைகளும், ஷெல்லும் கீஸும் பொழுது, இசைவாணன் உள்ளிட்ட காயமடைந்தவர்களை காவிவந்து முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மரநிழலில் கிடத்தினோம். காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பொழுதில் இசைவாணன் இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டான். நானும் எம் சகமருத்துவன் மணிவண்ணனும் அவனது உயிரற்ற உடலை ஸ்ட்ரெச்சரில் தூக்கிப்போனம். நானும் என் சகமருத்துவர்களும் அவனுக்கான புதைகுழியை சுடும் மண்ணில் வெட்டினோம். எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நேரத்திலும்,துயிலும் இல்லம் போன்றே எல்லோரும் மண் போட்டு , ஒரு பெரும் வீரனின் உடலை மண்ணுக்குள் புதைத்தோம். இறுதி நிகழ்வில் இசைவாணனின் மனைவியுடன் எம் சகமருத்துவர்கள் வாமன், மணிவண்ணன், வான்மதி, ராபிகா மற்றும் தீபன்,ரெஜி உற்பட சிலர் கலந்துகொண்டோம்.
வெள்ளி, 20 ஏப்ரல், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக