2008 இல் மீண்டும் எமது நிலம் அந்நிய சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிப்பு தொடரத்தொடங்கியது. எமது சத்திரசிகிச்சை கூடங்களையும் ஒவ்வொரு தடவையும் பின் நகர்த்த வேண்டியிருந்தது. பெரியமடு, கள்ளிக்காடு, முழங்காவில், ஜெயபுரம், மல்லாவி, அக்கராயன், கிளிநொச்சி, வட்டக்கச்சி, தருமபுரம், சுண்டிக்குளம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், இரணைப்பாலை, மாத்தளன்,வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் என எமது சத்திரசிகிச்சை கூடங்களும் நகர்ந்தது. ஒரு மருந்து பொருட்களும் விடுபடவில்லை என்பதை இறுதியில் நேரடியாய் உறுதிப்படுத்தியே வெளிக்கிடுவோம். எமது சத்திரசிகிச்சை அணிகள் இழப்புக்களை அவ்வப்போது சந்தித்தபோதும் இறுதிவரை மக்களையும் போராளிகளையும் காப்போம் என்ற உறுதியுடன் களத்தில் நின்றோம். எமது அணிகளை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்திய பெரும் வீரர்கள் வீழ்ந்தபோது ஒரு கணம் மனம் உலுப்பப்பட்டாலும் அடுத்த கணமே புதிய திட்டங்களுடன் ஒன்றானோம். இன்று இழப்புக்களின் வலி தாங்கமுடியாமல் இருக்கிறது.
செவ்வாய், 10 ஏப்ரல், 2018
திரும்பிப்பார்க்கிறேன் -32
2008 இல் மீண்டும் எமது நிலம் அந்நிய சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிப்பு தொடரத்தொடங்கியது. எமது சத்திரசிகிச்சை கூடங்களையும் ஒவ்வொரு தடவையும் பின் நகர்த்த வேண்டியிருந்தது. பெரியமடு, கள்ளிக்காடு, முழங்காவில், ஜெயபுரம், மல்லாவி, அக்கராயன், கிளிநொச்சி, வட்டக்கச்சி, தருமபுரம், சுண்டிக்குளம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், இரணைப்பாலை, மாத்தளன்,வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் என எமது சத்திரசிகிச்சை கூடங்களும் நகர்ந்தது. ஒரு மருந்து பொருட்களும் விடுபடவில்லை என்பதை இறுதியில் நேரடியாய் உறுதிப்படுத்தியே வெளிக்கிடுவோம். எமது சத்திரசிகிச்சை அணிகள் இழப்புக்களை அவ்வப்போது சந்தித்தபோதும் இறுதிவரை மக்களையும் போராளிகளையும் காப்போம் என்ற உறுதியுடன் களத்தில் நின்றோம். எமது அணிகளை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்திய பெரும் வீரர்கள் வீழ்ந்தபோது ஒரு கணம் மனம் உலுப்பப்பட்டாலும் அடுத்த கணமே புதிய திட்டங்களுடன் ஒன்றானோம். இன்று இழப்புக்களின் வலி தாங்கமுடியாமல் இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக