செவ்வாய், 9 மார்ச், 2010

கோடை விடுமுறை எனக்கும் அவனுக்கும்

எனது நாட்கள் அழகானவை,
வீட்டைவிட்டு நெடுந்தூரப் பயணம் - மகிழ்வுடன்
வெட்டை வெளியில் “tent” அடித்து – சுகமான
காற்றை அனுபவித்த இரவுகள்
நெருப்புமூட்டி வாட்டியயுவு உண்டு இரசித்த –அழகான
பகல்ப் பொழுதுகள்
அப்படிக் கழிந்த விடுமுறைக்காலம் இங்கே எனக்கு.

எப்படியிருக்கு எனது தம்பியின் விடுமுறை…??
அவனும்..
வீட்டைவிட்டு நெடுந்தூரம்தான் பயணிக்கின்றானம்- ஆனால்
துயரத்துடன்
வெட்டை வெளியில் ”tent” அடித்துத்தான் இருக்கின்றானாம் - ஆனால்
கந்தகநொடியை சுவாசித்துக் கொண்டு
வாட்டிய உணவையாவதும் உண்ணலாமாம் - ஆனால்
வாட்டத்தான் உணவில்லையாம்
இப்படிக் கழிகின்றது விடுமுறைக்காலம் அங்கே அவனுக்கு!
அவனது நாட்கள் துன்பமானவை!!

-கதிரவன்-


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share