வியாழன், 13 மார்ச், 2014

பேசப்படாதவர்

எமது விடுதலைப்போராட்டத்திட்காய் உழைத்தவர் பலர் .அதில் சிலர் வெளியில் பேசப்படாதவர்களாய் இருந்தார்கள்.அதில் இந்த தொழிலாளிகளும் அடக்கம்.
தொண்ணூறுகளில் அரியாலை துண்டியில் வீரச்சாவு அடைந்த போராளிகளின் வித்துடல்களை பழுதாகாமல் சீராக்கும்  நிலையம் அமைக்கப்பட்டது.இங்கு கடமை செய்பவர்கள் போர்க்காலங்களில் இரவு பகலென வேலை செய்வார்கள்.ஒருவித அர்ப்பணிப்புடன் வேலை செய்வார்கள்இடப்பெயர்வுகளோடு விஸ்வமடு ,பனிச்சங்குளம்,கனகபுரம் (கிளிநொச்சி),முரசுமோட்டையென  இவர்களும் தொடர்ந்து இடம்பெயர்ந்தார்கள். கிளிநொச்சி கனகபுரத்தில்தான் அதிககாலம் இருந்திருப்பார்கள் . எங்கு அமைந்திருந்தாலும் "துண்டி" என்ற சங்கேத மொழியில்தான் இந்த நிலையம் அழைக்கப்பட்டது.
எமது போராளிகளின் வித்துடல்கள் இராணுவத்தால் மீட்கப்படும்போது ,அவ்வுடல்கள் நாட்செல்லத்தான் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் எங்களுக்கு கிடைக்கும்.அநேகமாய் அவ்வுடல்கள் பழுதாகித்தான் வரும் . இத்தொழிலாளிகள் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து உரிய வீடுகளுக்கோ /இடங்களுக்கோ கொண்டு செல்ல உதவுவார்கள். இந்த தொழிலாளிகளின் அர்ப்பணிப்பு கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. விடுதலைப்புலிகளால் மீட்கப்படும் இராணுவ உடல்களில் நல்ல நிலையில் உள்ள உடல்களைத்தான் இராணுவம் பொறுப்பேற்கும்.மிகுதி
உடல்கள் விடுதலைப்புலிகளால் எரியூட்டப்படும். விடுதலைப்புலிகள் தங்களது எல்லா உடல்களையும் பெற்றுக்கொள்ள விரும்பினர்.
துண்டியை ஒழுங்கமைப்பதில் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பங்கு அளப்பரியது. இறுதி இடப்பெயர்வில் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைப்பதிலும் தங்கன் அரும்பாடுபட்டார்.தேவிபுரம் பகுதியில் வித்துடல்களை விதைக்கையில் நீர்மட்டம் மேல் இருந்ததால் தொடர்ந்து அவ்விடத்தில் விதைப்பதை நாம் நிறுத்த கூறினோம்.பின்  இரணைப்பாலை பின்  முள்ளிவாய்க்காலில்  வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இறுதிவரை மாவீரர்களை விதைக்கும்போது ,அவர்களுக்கு மரியாதை செய்யும் மூன்று துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. 

தங்கன் அவர்கள் இறுதிப்போரின் பின் பிரான்சிஸ் அடிகளாருடன் இணைந்து சரணடைந்து காணாமல்   போனார்.தங்கன் அவர்களுடன் தங்கனின் மனைவியும் இரு பிள்ளைகளும் சரணடைந்து  காணாமல்   போனார்கள்.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share