புதன், 19 மார்ச், 2014

குழந்தைகள் இலக்கு வைக்கப்படுவர்

குழந்தைகள்
விமானம்,செல் வீச்சு,பீரங்கி ,
ஆழ ஊடுருவும் படையணி,
இராணுவத்தாக்குதலால்
கொல்லப்பட்டார்கள்
குடும்பங்களோடு சரணடைந்து
காணாமல் போனார்கள்
"பாலச்சந்திரன்" உணவு கொடுத்து
கொல்லப்பட்டான்
வயிற்றில் குழந்தையோடு
தாய் கைது செய்யப்படுகிறார்
இன்று "விபூசிகா" கதை கட்டி
கைது  செய்யப்படுகிறார்
இனச்சுத்திகரிப்பில்
குழந்தைகள் இலக்கு வைக்கப்படுவர் 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share