FATHER FRANCIS JOSEPH
இவர் ஒரு பாதிரியார்.சென் பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர்.தமீழீழ கல்வி மேம்பாட்டுப்பேரவையின் தலைவர்.கிளிநொச்சியில்
சிறப்பாக இயங்கிய ஆங்கிலக்கல்லூரியின் முதுகெலும்பு.வாழ்நாள் முழுவதும் மனித முன்னேற்றத்திட்காய் தன்னை செயலில் ஒப்புவித்தவர்.
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கீழ் CHILDREN
DEVELOPMENT COUNCIL (CDC)எனும் அரசசார்பற்ற நிறுவனம் இயங்கிவந்தது.இந்த நிறுவனம் இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில்
உள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்காக (குறிப்பாக முன்பள்ளி மாணவர்) உருவாக்கப்பட்டது.இந்நிறுவனத்தை இ.இரவி அவர்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிர்வகித்துவந்தார்.இந்நிறுவனத்தின் தலைவராக பிரான்சிஸ் Father இருந்தார்.நான் தமிழ்ச்செல்வனின் வேண்டு கோளுக்கு இணங்க CDC இன் ஆலோசகராய் இருந்தேன். இறுதியாயும் CDC இன் நிர்வாகக்கூட்டத்தில்தான் சந்தித்துக்கொண்டோம். அன்று
நிர்வாகக்கூட்டம் முடிந்தபின்னும் நீண்டநேரம் Fatherஉம் இரவியும் நானும் உரையாடினோம். பின்பு
அவரை சந்திக்க தருணம் கிடைக்கவில்லை.அவர் இறுதிவரை மக்களுடன் இருந்தார்.
முள்ளிவாய்க்காலின் இறுதிநாளில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனார்.இவருடன் இரவியும் ,இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்களும் ஒன்றாக சரணடைந்து காணாமல் போனார்கள்.சரணடையும் போது Father
இன் வயது எழுபத்தைந்து. சரணடைந்தவர்களில்
சிலர் முழுக்குடும்பமாக சரணடைந்தார்கள்.கைக் குழந்தைகள் கூட இந்த காணாமல் போனவர் பட்டியலில்
இருக்கின்றன. காணாமல் போனவர்களில் சிலர் முழுக்குடும்பமாய் காணாமல் போனதால் அவர்களை
தேடக்கூட / பட்டியலில் பதியக்கூட ஆட்கள் இல்லை. இறுதி யுத்தத்தின் பின் காணாமல் போன
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின்
நினைவுகளையும்
தாய்மண் சுமக்கும் ஒரு தாயைப்போல . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக