வியாழன், 21 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 46


நான் முள்ளிவாய்க்காலை விட்டு நகரும் போது ஒரு கடமையை ஓரளவு செய்துவிட்ட உள்உணர்வு  அதாவது மக்கள் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து போய்விட்டார்கள். தொற்றுநோய்களில் இருந்து மக்களை காப்பாற்றிவிட்டோம். மற்றைய கடமை நெஞ்சை பிசைந்துகொண்டிருந்தது.  நான் தலைவனுக்கு உரிய மருத்துவன். அவருக்கு அருகில் நிற்கவேண்டியவன். அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் நேற்றிரவு(16/05/2009) தப்பியிருப்பார் என என்மனமும் அருகில் சுதர்சனும்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேறுவழியில்லை. அருகில் சிங்கள இராணுவம். சில நேரம் சுதர்சன் என்னோடு நின்றிருக்காவிட்டால் நான் வந்திருக்கமாட்டேன். வந்தும் சுதர்சனை இழந்துவிட்டேன். சுதர்சனுக்கு என்ன நடந்தது என கூட தெரியவில்லை.           


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share