சனி, 30 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-50


நாம் சிறுவர்களாக இருக்கும்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டுதடவைதான் புது உடுப்பு கிடைக்கும். அது சித்திரை வருடப்பிறப்போ தீபாவளியாகவோ இருக்கும்.  அப்பா ஒரு roll shirt துணியும் ஒரு roll காற்சட்டை துணியும் வாங்கிவருவார். அம்மா எனக்கும் சகோதரர்களுக்கும் அப்பாவிற்கும் shirt உம் எங்களுக்கு காற்சட்டையும் அப்பாவிற்கு நீளக்காற்சட்டையும் தைப்பார். நாங்கள் uniform போலத்தான் போட்டுத்திரிவோம்.நாங்கள் சகோதரர்கள் என்று அடுத்த ஊர்க்காரனும் கண்டுபிடித்துவிடுவான். சங்கக்கடையில் சீத்தைத்துணி ஒரு roll வாங்கி எல்லோருக்கும் சாரம். பாடசாலைக்கு மட்டுமே செருப்பு(பாட்டா) போடுவோம். இப்போது காலம் அப்படியில்லை. வீட்டுக்குள்ளும் செருப்பு போடுகிறார்கள் . வயலிலும்  செருப்பு போடுகிறார்கள். எனக்கு எதுவும் பிழையாக தெரியவில்லை.   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share