வியாழன், 18 ஜூலை, 2013

முன்னாள் மூத்த பெண் போராளி

முன்னாள் மூத்த பெண் போராளி ,தொண்ணூறுகளிலேயே  இயக்கத்தில் இருந்து விலகிவிட்டார்.இப்போது திருமணம் செய்து நான்கு பிள்ளைகள்.துரதிஷ்டவசமாய் கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
விபத்தொன்றில் சிக்கி ,ஒரு காலில் பெரும் காயம் .பல தடவைகள் யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சை செய்தும் எலும்பு பொருந்தவில்லை. இறுதியில் கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய சிபார்சு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்த சிறுக சிறுக சேமித்த பணமெல்லாம் முடிந்து ,இப்போது கடன் வாங்கி மூன்று தடவை கொழும்பு போய் வந்தாச்சு.இந்த முறை சத்திர சிகிச்சை செய்யும் திகதியும் நிர்ணயிக்கப்பட்டது.இருக்கின்ற ஒரே காணி ஈடு வைக்கப்பட்டது.ஏதோ பொருத்தும் பொருளும் இரண்டு இலட்சம் ரூபாயிட்கு வாங்கியும் கொடுக்கப்பட்டு இன்றுதான் சத்திரசிகிச்சை என இருந்தது.பின் இன்று சத்திர சிகிச்சை பின்போடப்பட்டுள்ளது.தாதிமார் பகிஸ்கரிப்பு போராட்டமாம். சத்திரசிகிச்சைக்குப்பின் அவரை பார்க்கவென யாழில் இருந்து ஒருவரை கூட்டிப்போயிருந்தார்.அவருக்கு நாளுக்கு ஆயிரத்து ஐநூறு கொடுக்கோணும்.நாளைக்கு டாக்டர் வந்துதான் சொல்லுவார் எப்ப சத்திரசிகிச்சை என்று. அநேகமாய் ஒரு கிழமைக்குள்ள இருக்காது.ஏனெனில் நாளைக்கு நாளன்டைக்கெல்லாம்  வேற நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சை போட்டிருக்கு. முன்னாள் பெண்போராளி நான்கு சிறிய பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அழுதுகொண்டிருக்கிறார்.   

யாரில் குற்றம்? அநேகமாய் எல்லோரும் படிக்கும் வயதில் போராட்டத்திற்கு வந்தவர்கள்.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிட்கு
எதையும் படித்தறியும் சூழல் இருக்கவில்லை.ஆளணி பற்றாக்குறையால்
பலரின் வேலையை ஒராளே செய்யவேண்டியிருந்தது.சாதாரண வாழ்க்கையிட்கு திரும்பும் போது சுமை அதிகமாய் இருக்கிறது.


 ஓவியன்   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share