புதன், 3 ஜூலை, 2013

தப்பினோம் பிழைச்சோம்

எண்பத்தி ஐந்தாம் ஆண்டாய் இருக்கவேண்டும்.எனக்கு ஒரு அறிவித்தல் வந்தது.எங்களுடைய வேலை சம்மந்தமாய் கொழும்பு சென்ற ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டுவிட்டதாய். அந்த வீட்டுக்கு இந்த அறிவித்தலை தெரியப்படுத்திவிடவும்.நானும் நண்பனும்தான் வெளிக்கிட்டம்.சங்கானைக்குப்போய்,சேர்ச் ரோட்டுக்கு போய் உள்ளுக்குப்போகவேணும். ஒருமாதிரி வீட்டை கண்டுபிடித்து போய் விட்டோம்.இருவருக்குமே இப்படி செய்தி சொல்லி பழக்கமில்லை.அங்கு யாரும் தெரிந்தவராயும் இல்லை.ஒருமாதிரி ஒரு ஐயாவிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டேன்.திடீர் சாவுதானே அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.வீட்டில் இருந்த சாமிப்படங்கள் எல்லாம் முற்றத்தில் போட்டு உடைக்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு இருநூறு பேர் கூடிவிட்டனர்.நாங்கள் அங்கு இருக்க இன்னொரு போராளி வந்து என்னை அழைத்தான்.நான் எழுந்து போய் என்ன என்று வினவினேன்.உங்களுக்கு சொல்லட்டாம் இறந்தது இவரில்லையாம் அது வேற ஆளாம்.எனக்கு தலை சுற்றிற்று.அவன் போய் விட்டான்.அதில நான் எப்படி சொல்கிறது.நண்பனை இரகசியமாய் அழைத்து விடயத்தை சொன்னேன்.அவன் சொன்னான் இதுக்குள்ள ஒரு ஆள் அமைதியாய் வேலை செய்துகொண்டிருக்கிறார்.அவரை கொஞ்ச தூரம் கூட்டிப்போய் விசயத்தை சொல்லிட்டு போவம்.அப்படியே செய்தோம்.நாம் சொல்லும்போது நாம் எதிர்பார்க்காதமாதிரி அந்த மனிதர் சந்தோசப்பட்டார்.நாங்கள் தப்பினோம் பிழைச்சோம் என்று வந்து சேர்ந்தோம்.எனது நண்பன் எண்பத்தி ஏழில் வீரச்சாவு அடைந்துவிட்டான்.


 ஓவியன்  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share