ஞாயிறு, 7 ஜூலை, 2013

சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் .

அண்ணை யார் கதைத்தாலும் அதற்கு முக்கியத்துவப்படுத்தி செவிசாய்ப்பார்.இளைய போராளிகள் சில நேரம் கதைக்கிறதை கேட்கிறதே எங்களுக்கு கஸ்டமாய் இருக்கும் ஆனால் அதற்கு அண்ணை
விலாவாரியாய் விளங்கப்படுத்துவார்.தெரியாத விடயங்களை எவரிடமிருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ளுவார்.  புலிகள் மிகவும் நல்ல நிர்வாகத்தை நடத்த வேண்டும் என உளம் நிறைய விரும்பியிருந்தார். அவருடைய எதிர்பார்ப்பை ஓரளவுதான் நடைமுறையில் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருந்தது.தங்களுடைய   சரிகளையும்,பிழைகளையும் ஏற்றுக்கொண்டு,பிழைகளை திருத்தவேணும் என்று சதா சந்திப்புகளில் சொல்லிக்கொண்டு இருப்பார்.
அண்ணையின் பாதுகாப்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் பாதுகாப்பு அணியில் உள்ள போராளிகளுக்கு மழை உடுப்பு வாங்கிக்கொடுக்கும் படி அண்ணை சொல்லியிருந்தது.பொறுப்பாளர் வேலைப்பளுக்களுக்கிடையில் 
மறந்துவிட்டார்.அண்ணை கிளிநொச்சியில் இருந்து தன் முகாம் திரும்பிக்கொண்டு இருந்தபோது பாதுகாப்பு  அணியை சேர்ந்த சில போராளிகள் நனைந்து போவதை கண்டுவிட்டார். பொறுப்பாளர்  தோப்புக்கரணம் அடித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த புதிது ,ஏரியா அரசியல் பொறுப்பாளர் ஒருவர் மீது ஒரு குடும்பம் குற்றம்  ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது.அந்த பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்ச்செல்வனை நான் சந்திக்கப்போயிருந்த நேரம் அவர் அந்த குடும்பத்தை சந்திக்க வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்.என்னையும் வாங்கோவன் என்றார்.அந்த வீட்டை போனோம் அந்த வீட்டின் தலைவனும் தலைவியும்தான் இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் அந்த விடயத்தை சொல்லி ,எங்களை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கோ என்றார் .அந்த தாயும் தந்தையும் அழத்தொடங்கிவிட்டார்கள் .கடவுளே நீங்கள் அதுக்கு மன்னிப்பு கேட்ககூடாது.நீங்கள் என்னப்பா பிழைசெய்தனீங்கள்.பிரயத்தனப்பட்டு எல்லாவற்றையும் சமாளித்து வெளிக்கிட்டோம். சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் . 

ஓவியன்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share