சனி, 21 மார்ச், 2015

அ(க)ருகிப்போவாயோ?

மதம் பிடித்தது
மதகுருக்களுக்கு
வதம் நடந்தது
சிறு இனங்களுக்கு
நிச்சயமாய்
இந்துமத சித்தாத்தர்
இதயம் நொந்திருப்பார்
காவியுடை மட்டும்
பிக்கு கையில் சிக்கிற்று
புத்தசிந்தனைகள் தப்பிற்று
புத்தபகவான் நிர்வாணமானார் 


மனக்காயங்களோடு அகதியானோம்
மக்களுக்கு மீட்சிவர
காயங்களை குடைந்து,குடைந்து
சாட்சியானோம்
ஆட்சிமாற
சர்வதேசம் கட்சிமாறும்
சூழ்ச்சி ஆளும் உலகில்
இது புதினமல்ல
"அயல்" பெயருக்கு மட்டும்
எம்தாயக பசிக்கு ஊட்டும்
கள்ளிப்பால் "அயல்"
அது காந்தியின் தேசமல்ல
கோட்சேயின் தேசம்  
வயல் எரிந்து,வயிறு எரிந்து
நீ எரிகையில்
வெளிச்சம் அயலுக்குத்தான்
அ(க)ருகிப்போவாயோ?

துளிர்த்துவருவாயோ?    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share