செவ்வாய், 31 மார்ச், 2015

மணலாறு / தமிழர்களின் இதயபூமி

மணலாறு / தமிழர்களின் இதயபூமி
மூ எட்டு மணிக்குள் வெளியேறு !
ஒலிபெருக்கி அலற
பூர்வீக மக்கள் 
வளம்நிறைந்த நிலம் துறந்து
அகதியாகி
நா எட்டு வருடங்கள்  
குடியேற்றத்தோடு ஆக்கிரமிப்பு
தமிழர்நிலம் துடிதுடிக்க துண்டானது
வட ஆட்சி பெற்றும்
மீள்குடியேற்றம் இல்லை
யாவும் கண்துடைப்பிற்கே

அடுத்த நூற்றாண்டில்
ஈழத்தில் தமிழனின் வீதம்
அருகிவிடும்
சிங்கள,முஸ்லீம் வீதம்
பெருகிவிடும்
தமிழனின் உரிமைக்கேள்வி
செவிடன் காதில் ஊதப்படும் சங்கு  
புலத்தில் ஈழத்தமிழர்
சுயம் இழப்பர்
அரைவாசி தேறுவதே கடினம்  

சில தசாப்தங்களுக்கு முன்
வேலிக்கு கூட சண்டைபிடித்த
ஈழத்தமிழன் 
ஐந்து நூற்றாண்டுக்குப்பின்
ஆராய்ச்சிக்கு தேடப்படுவான்

பிறப்புவீதம் மடங்காகவேண்டும்
சுயபொருளாதாரம்
வன்னியில்,கிழக்கில்,மலையகத்தில்
நிலையாகவேண்டும்
பூர்வீக நிலங்களை இழக்காதே!
பூர்வீகத்தை இழந்துவிடுவாய்.
    

  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share