வியாழன், 2 ஏப்ரல், 2015

எங்கே எம் பிள்ளை?

இராணுவம் முன்னேற ஒவ்வொரு இடங்களுமாய் விடுபட்டுக்கொண்டு இருக்கும். இறுதியில் இடம்மாறும் சத்திரசிகிச்சைகூடமாய் எங்கள்   சத்திரசிகிச்சைகூடம் இருக்கும். இயன்றவரை எல்லா பொருட்களையும் அனுப்பிவிட்டு, சரிபார்த்துவிட்டு போகும் இறுதிக்கணங்கள் (மன்னாரிலிருந்து). மார்கழி 31
2008  மதியநேரம் , நாங்கள் காக்கா கடைச்சந்தியில் நின்றோம். நான் சந்தியில் நின்று A-9 பாதையை பார்த்தேன். பாதை நீட்டுக்கு நாய்கள் சிலதை தவிர எவருமே இல்லை. மனம் கனத்தது. சுதர்சன் இராணுவம் உள்ளுக்கு வந்திருக்கும்,போவோம் போவோம் என கரைந்துகொண்டிருந்தான்( முள்ளிவாய்க்கால் வரை) . அவனது திருமணத்தில் அவனது தந்தையும் தாயுமாய் நானும் மனைவியுமே இருந்து நடாத்தினோம். எங்கே எம் பிள்ளை?  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share