வெள்ளி, 24 ஏப்ரல், 2015

அன்றையநாள் மகிழ்வாயிற்று.

1991 ஆனையிறவின் மீதான ஆகாய கடல்வழித்தாக்குதல்  விடுதலைப்புலிகளுக்கும் முதல் முதலில் பாரிய காயங்களும் இறப்புகளும் ஏற்படுத்திய தாக்குதல். நான் களமருத்துவராய்  செயற்பட்டுக்கொண்டிருந்தேன் . களமுனையில் இறந்தவர்களை அரைப்பெட்டி அடித்த ரைக்டரில் கொண்டு வருவார்கள்.அவற்றையும் இறப்பை உறுதிப்படுத்திவிட்டு பின்னுக்கு அனுப்பவேண்டும்.ஒவ்வொருமுகங்களும் தெரிந்த முகம்போல இருக்கும்.இளவயது மரணங்களை பார்த்து உறுதிசெய்வது மனதுக்கு மிகப்பாரமானது.அன்றும் ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்பட்டன.பரிசோதித்து பார்க்கும் போது ஒரு உடலில் இதய துடிப்பு மெதுவாய்க்கேட்டது . விரைந்து செயற்பட்டோம்.கண் விழித்தவனை உரியமுறையில் மேலதிக சிகிச்சைக்கு  பின் அனுப்பினோம்.அன்றையநாள் மகிழ்வாயிற்று.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share