தந்தை செல்வா
தமிழர் உரிமை பெற
அகிம்சைவழியில் முயன்று
ஒப்பந்தங்கள் வரை சென்றும்
சிங்கள ஏகாதிபத்தியம்
கிழித்தது
ஒப்பந்தங்களை மட்டுமல்ல
தமிழரின் நம்பிக்கையும்தான்
தமிழீழமே தீர்வென
வட்டுக்கோட்டையில் வரைபுகீறி
1977 இல்
தாயகம் முழுமனதுடன் ஏற்றிட
ஜனநாயக வெற்றி தோற்றிட
"கடவுள்தான் தமிழரை காக்கணும் "
என்று நீங்கள் சொல்லிட
வேறு வழியற்று ஆயுதபோராட்டம்
இளைஞர்களில் தீப்பற்றிக்கொண்டது
நேற்று
உங்களின் நினைவுதினம்
செம்மணி படுகொலை நாயகி
பிரதம உரை
மனம் ஏற்கவில்லை
சிங்கள அரசு புரிந்தது
"இனப்படுகொலை" என
வட தமிழ் அரசு
முழுமனதாய் அறைகூவ
குறைப்பிரசவமாகிறது
மீண்டும் நம்பிக்கை
தமிழரின் வாக்குகள்
கட்சிக்கானது அல்ல
ஒற்றுமைக்கானது/
எதிரிக்கு எதிரானது
வாக்குகள்
வெறும் கையடையாலமல்ல
இதயகாயத்தின் அடையாளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக