செவ்வாய், 21 ஏப்ரல், 2015

என்சகாக்களை பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்

1990 ஆரம்பங்களில் சத்திரசிகிச்சைகள் யாவும் யாழ் பொது மருத்துவமனைகளில்த்தான் செய்யப்பட்டது. பொது மருத்துவமனை நீண்ட அனுபவங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. போராளிகள் எண்ணிக்கை எப்போதுமே போதாமையோடுதான் இருக்கும். காயமடையும் போராளிகளை அநியாயமாய் இழந்துவிடக்கூடாது.எனவே களமருத்துவம் முக்கியத்துவம் ஆகிற்று.களமருத்துவபணி சவால்கள் நிறைந்தது. பணியில் மருத்துவப்போராளிகளை இழந்த துயருடனும் வெற்றி பெற்றோம் என்றுதான் நினைக்கிறேன். 
1995 இல் வன்னிக்கு இடம்பெயரும்போது சில பெரியவர்கள் சொன்னார்கள். இனி புலிகளால் பெரும்தாக்குதல்கள் செய்யமுடியாது.காயமடைபவர்களை என்ன செய்வார்கள்?.ஆனால் புலிகளின் ஒவ்வொரு மூத்தமருத்துவருக்கும் ஏதோ ஒரு எண்ணம் இருந்திருக்கும். எனக்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஆயிரம் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சத்திரசிகிச்சை அணியை உருவாக்கவேண்டும் என்ற அவாவே இருந்தது.அதில் நாங்கள் வெற்றிபெற்றோம் என்றே நினைக்கிறேன். ஸ்ரீலங்கா அரசாங்கமோ புலிகள் காயமடைபவர்களை சிகிச்சை அளிக்கமுடியாமல் சுட்டுக்கொல்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது.
2006 ஆம் ஆண்டு போர் மேகம் வன்னியை சூழ்ந்துகொண்டது. மூன்று பிரதான மருத்துவதளங்களை அமைக்க அரசியல்துறை பொறுப்பாளர் விரும்பினார். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி,மன்னார் இல் அமையவேண்டும். புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியை இரு மூத்தமருத்துவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். அவர்களது சத்திரசிகிச்சைகூடங்கள் அவ்விடங்களில் ஏற்கனவே இயங்கிக்கொண்டும் இருந்தன.
நான் மன்னார் பகுதியை பொறுப்பெடுத்தேன். சமாதானகாலத்தின்பின் எனது casualty theater  யை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உருவாக்கவேண்டியிருந்தது. இம்முறை குறைந்தது மூன்று casualty  operation theater களை இயக்குவது எனமுடிவுசெய்தேன். கிளிநொச்சி பொன்னம்பல மருத்துவமனையின் theater யை இயன்றவரை casualty cases எடுக்காமால் தவிர்த்தேன்.வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இறுதிவரை எமது பணியில் மூச்சோடு இயங்கினோம்.பணியில் தோள் தந்து உயிர் துறந்த என்சகாக்களோடு, பணிக்கு உயிர்தந்த  உலகெலாம் பரந்துவாழும் 

என்சகாக்களையும் பாசத்தோடு நினைந்துகொள்கிறேன்.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share