புதன், 22 ஏப்ரல், 2015

நண்பன் சிவமனோகரன்

நேற்று நண்பன் சிவமனோகரனின் ஆறாவது வருட நினைவுதினம். அந்தநாள்(21/04/2009) காலை வலைஞர்மடத்தில் எமது சத்திரசிகிச்சைகூடத்திலிருந்து   சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டில் எங்கள் சிவா மரணமடைந்தான். கொத்துக்குண்டில் ஒன்று சரியாக எமது கூரையின் சிலாகைக்கிடையில் வந்து சிக்கி நின்றது.அதன் நேர் கீழே நான் ,வாமன்,சுதர்சன் உள்ளீடாய் எம் சகாக்கள் நின்றோம். ஒரு மருத்துவர் காயமடைந்து இருக்கிறார் என்று யாரோ வந்து சொன்னார்கள்.நான் ஓடிச்சென்று என் இருபத்திஐந்து வருட நண்பனின் இறப்பைத்தான் உறுதிசெய்தேன்.    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share