2009 இல் முள்ளிவாய்க்காலில் இருந்து வந்து ஒரு நாள் செட்டிகுளம் zone -4 முகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு பின்னேரப்பொழுதில் திடீரென ஒருபகுதியில் இருந்து அழுகையொலி கிளம்பிற்று. என்ன ஏதோ என்று தெரியாமல் சோர்ந்திருந்தபோது யாரோ சொன்னார்கள் " ஒரு சிறுமி மலக்குழியுக்குள் வீழ்ந்துவிட்டதாய்" ஓடினேன் ஏதாவது முதலுதவி செய்யலாம் என்று. அவர்கள் பிள்ளையை zone -4 இல் உள்ள மருத்துவநிலையத்திற்கு கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப்பின் மீண்டும் அழுகையொலி சிறுமி இறந்துவிட்டாளாம்.ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்ற எவ்வளவு பாடுபட்டிருப்போம். முள்ளிவாய்க்கால் இறுதிவரை எமது செயற்பாடுகளால் தொற்றுநோய் தடுப்பில் வென்ற நாம். செட்டிக்குள அரச முகாம்களில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை தொற்றுநோய்களுக்கு இழந்துவிட்டோம். என்னால் நீண்டகாலம் பராமரிக்கப்பட்ட பல கிளினிக் நோயாளர்களும் செட்டிக்குள காலத்தில் மரணித்துப்போனார்கள்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக