ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது. ஆனந்தபுரத்தினுள் சத்திரசிகிச்சைகூடம் அமைக்கமுடியுமா? என என்னிடம் வினவப்பட்டது.ஏற்கனவே எமது சத்திரசிகிச்சைகூடங்கள் மாத்தளன் ( சத்திரசிகிச்சைகூடம்- 3), முள்ளிவாய்க்காலில் (   சத்திரசிகிச்சைகூடம்- 1)
அதிவினைத்திறனுடன் இயங்கிக்கொண்டிருந்தன.   சத்திரசிகிச்சைகூடம்- 2 , ஏற்கனவே மக்களின் நலன்கருதி  முள்ளிவாய்க்கால் மருத்துவமனையுடன் இணைத்திருந்தேன். அதன் பொறுப்பு மருத்துவர் கமலினி அவர்களும் கடமையின்போதே செல்வீச்சால் எமைவிட்டு பிரிந்திருந்தார். மற்றைய  சத்திரசிகிச்சை கூடங்களின் வினைத்திறனில் எப்பாதிப்புகளும் ஏற்படாமல் நான் சிறு சத்திரசிகிச்சை அணியை ஒன்றாக்கி(தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளரை மட்டும் விட்டு விட்டு) போவதற்கான ஏற்பாடுகளை செய்து காத்திருந்தோம். சுதர்சன்தான் அணிக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் ஒன்றாக்கினான்.  சத்தியாவும்,சில மருத்துவ போராளிகளும் ஆனந்தபுரத்தினுள் உச்சகடமையில் இருந்தார்கள்.அவர்களையும் என்னோடு இணைக்கும் எண்ணம் எனக்கு பலத்தைதந்தது.  இரவு இரண்டு மணிக்கு போகத்தேவையில்லை என்றபதில் வந்தடைந்தது. 

    

  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share