திங்கள், 6 ஏப்ரல், 2015

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனையால்  கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனை பிரிவிற்குள் பல ஆய்வுகளை செய்தோம். அதன்படி குழந்தைகளின் பிறப்புநிறை இரண்டுகிலோவைவிட குறைவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் நிறை அதிகரிப்பு 5.4 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.சுமார் ஆயிரம் மாணவர்கள் பாடசாலையை இடைநிறுத்தியிருந்தார்கள். பாடாசாலைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொடுத்தோம் அப்படியிருந்தும் பெரும்பாலான மாணவர்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கமுடியவில்லை. உண்மையிலேயே உணவுதான் அவர்களின் பிரச்சனையாக இருந்தது. போசாக்கு சம்மந்தமான பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.போசாக்கு கல்வியூட்டலை ஆசிரியர் , மாணவர், வீடுகள்வரை முழுமைப்படுத்தினோம். பல கண்காட்சிகளை நடாத்தினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்பு திட்டத்தை தொடர்ந்து உலக உணவுத்திட்டத்தின் (WFP )    need  assessment இற்கான கிளி முல்லை மாவட்டத்திற்கான consultant ஆக WFP ஆல் நியமிக்கப்பட்டேன். புலிகளின் கட்டுப்பாட்டில் கிளி முல்லை மாவட்டங்களுக்கு அப்பால் மன்னார்,வவுனியா,யாழ்ப்பாணத்தின் சிறுபகுதிகளும் இருந்தது. நான் முழுமையான விபரத்தையே அறிக்கையாக கொடுத்தேன்.WFP ஏற்றுக்கொண்டு என் அறிக்கையில் உள்ள ஆலோசனைகளுக்கு ஏற்ப தங்களது உணவு திட்டத்தை எங்கள் பிரதேசத்தினுள்ளும் அமுல்ப்படுத்தினார்கள். இச்செயற்பாடும் எனக்கு எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொற்று நோய்களைகட்டுப்படுத்துவதில் உதவிற்று. 2005 ஆம் ஆண்டுக்காலத்தில் பிறப்புநிறை சராசரி 2.9 கிலோவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் சராசரி நிறை அதிகரிப்பு 8.7 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.  

    

  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share