தவறுகள் தவறுகள்தான்
வாதாடவரவில்லை
தண்டனை
ஒருவரை திருத்தத்தான்
திருந்தாதவனைக்கூட
கொல்வது நியாயமல்ல
கொலைக்குகூட
கொலை பரிகாரமல்ல
தவறு செய்யாதவன் உலகிலில்லை
மரணம்
ஒருமுறைவரும்
மரணத்திற்கு திகதி குறித்து
சவப்பெட்டியையும் காட்டி
மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்
மரணத்தைவிட கொடியது
தாய் ,சக உறவுகளின்
எஞ்சியவாழ்வு
நினைவிற்கே கடினமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக