புதன், 29 ஏப்ரல், 2015

மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்



               தவறுகள் தவறுகள்தான்
வாதாடவரவில்லை
தண்டனை
ஒருவரை திருத்தத்தான்
திருந்தாதவனைக்கூட
கொல்வது நியாயமல்ல
கொலைக்குகூட
கொலை பரிகாரமல்ல
தவறு செய்யாதவன் உலகிலில்லை
மரணம்
ஒருமுறைவரும்
மரணத்திற்கு திகதி குறித்து
சவப்பெட்டியையும் காட்டி
மரணத்திற்கு முந்திய சித்திரவதைகள்
மரணத்தைவிட கொடியது
தாய் ,சக உறவுகளின்
எஞ்சியவாழ்வு
நினைவிற்கே கடினமானது    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share