வெள்ளி, 29 மார்ச், 2024

முள்ளிவாய்க்கால் இறுதிநாள் இளைய போராளிதான் நீ அரச கட்டுப்பாட்டுக்குள் யாவும் அடங்கிக்கொண்டிருந்தது கைக்குழந்தையை இருகைகளால் தூக்கி முத்தமிட்டு மனைவியுடன் அனுப்பிவிட்டு போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய் அவர்கள் போய்முடியும்வரை தோளில் இருந்த துப்பாக்கியை கைகளில் மாற்றியபடி ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய் ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம் பிரிந்து நீ போனாய் சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய் நான் உனைப்பார்க்க நீ கையசைத்துவிட்டு போனாய் பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share